News November 18, 2024

முதியோர் எண்ணிக்கை அதிகமானால் என்ன ஆகும்?

image

தமிழகத்தில் சராசரி வயது உயரும் நிலையில், அதற்கேற்ப முதலீடுகள் இல்லையெனில், முன்னேறிய மாநிலமாக இல்லாமல், முதியோர் மாநிலமாக மாறும் என CM ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மக்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்தால்: *நாட்டின் மனித வளமும், உற்பத்தித் திறனும் குறையும் *வெளியாள்களை பணியமர்த்த நேரிடும் *மருத்துவ & பராமரிப்பு செலவு, அரசின் சமூக பாதுகாப்பு செலவு அதிகரிக்கும் * சார்ந்திருக்கும் மக்கள் தொகை உயரும்.

Similar News

News March 7, 2026

மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

image

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 7, 2026

BREAKING: சம்பள உயர்வு.. அறிவித்தது தமிழக அரசு

image

மே மாதம் முதல் மருத்துவத் துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதன் மூலம், 41,000 ஊழியர்களுக்கு 2026- 27-ம் ஆண்டுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்றும் இதன்மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ₹169 கோடி செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு ஊதிய உயர்வு என்ற விவரங்களுடன் விரைவில் அரசாணை வெளியாகும்.

News March 7, 2026

EPS-ன் பொதுச் செயலாளர் பதவியை பாஜக பறிக்கும்: CM

image

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு பாஜகவால் ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு EPS-க்கு பதில் வேறு ஒருவரை பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. EPS-ஐ இந்த தேர்தல் வரைக்கும்தான் பாஜக பொறுப்பில் வைத்திருக்கும். ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்போதே அவர் பதவி பறிபோயிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!