News November 18, 2024
முதியோர் எண்ணிக்கை அதிகமானால் என்ன ஆகும்?

தமிழகத்தில் சராசரி வயது உயரும் நிலையில், அதற்கேற்ப முதலீடுகள் இல்லையெனில், முன்னேறிய மாநிலமாக இல்லாமல், முதியோர் மாநிலமாக மாறும் என CM ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மக்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்தால்: *நாட்டின் மனித வளமும், உற்பத்தித் திறனும் குறையும் *வெளியாள்களை பணியமர்த்த நேரிடும் *மருத்துவ & பராமரிப்பு செலவு, அரசின் சமூக பாதுகாப்பு செலவு அதிகரிக்கும் * சார்ந்திருக்கும் மக்கள் தொகை உயரும்.
Similar News
News December 13, 2025
காங்கிரஸில் இருந்து விலகுகிறாரா சசி தரூர்?

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் MP-க்கள் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்தது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அண்மைக் காலமாக சோனியா, கார்கே ஆகியோரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் அவர், PM மோடி, மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் அதிகம் தலையை காட்டி வருகிறார். இதனால், அவர் கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைவதற்கு அச்சாரமிடுவதாக பேச்சு எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News December 13, 2025
இந்தியா மீதான டிரம்ப்பின் வரியை நீக்க தீர்மானம்

இந்திய பொருள்கள் மீது டிரம்ப் விதித்த 50% வரியை முடிவுக்கு கொண்டுவர, US பிரதிநிதிகள் சபையின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வரியை சட்டவிரோதமானது எனக்கூறிய டெபோரா ராஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி(இந்திய வம்சாவளி), இதனால் USA தொழிலாளர்கள், நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். வரியை நீக்கினால் இருநாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெறும் எனவும் கூறினர்.
News December 13, 2025
பொங்கல் பரிசு ₹3,000.. வெளியான முக்கிய தகவல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, நிதி ஆதாரங்களை திரட்ட அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளதாம். குறிப்பாக, அதிக லாபத்தில் இயங்கும் துறைகளிடம் கூடுதல் நிதி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிச., கடைசி வாரத்தில் பொங்கல் பணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


