News November 17, 2024
இந்திய அணியை வழிநடத்தும் பும்ரா?

வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸி.,-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை பிறந்ததன் காரணமாக முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா பங்கேற்காததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் 2ஆவது போட்டியில் அவர் பங்கேற்பார். மேலும், நிதிஷ்குமார் ரெட்டி இந்த போட்டியின் மூலம் டெஸ்ட்டில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 7, 2026
மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

‘ஹெல்த் கான்ஷியஸ்’ என்ற பெயரில் சிலர் மதுவில் டயட் சோடாவை கலந்து குடிப்பார்கள். ஆனால், இது ஆபத்தை ஏற்படுத்தும் என ஓர் ஆய்வு எச்சரிக்கிறது. அதாவது, சாதாரண சோடாவை கலந்து குடிப்பவர்களை விட, டயட் சோடா கலந்து மது அருந்துவோரின் ரத்தத்தில் மிக விரைவாக ஆல்கஹால் கலந்து மிதமிஞ்சிய போதையை ஏற்படுத்தி விடுகிறதாம். டயட் சோடாவில் சர்க்கரை குறைவாக இருப்பதால், ரத்தம் விரைவாக ஆல்கஹாலை உறிஞ்சி விடுகிறதாம்.
News March 7, 2026
T20 WC: நாளை வருண் விளையாடுவாரா?

வருண் சக்ரவர்த்தி நாளை நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார், வருணின் ஃபார்ம் பற்றி தங்களுக்கு கவலையில்லை; நம்பர் 1 பவுலரான அவருக்கு அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது என்று தெரியும் என்று கூறினார். மேலும், லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து நாளை தெரியவரும் என்றார்.
News March 7, 2026
மகளிருக்கு ₹5 லட்சம்.. ஜாக்பாட் தேர்தல் அறிவிப்பு

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அடுக்கியுள்ளார். அதில் குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுகளில் உறுப்பினராக இருந்து MSME நிறுவனம் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது 100% மானியம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகளிர் நலனுக்காக தனி இலாகா தொடங்கப்பட்டு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.


