News March 19, 2024

சீமான் வழக்கில் விஜயலட்சுமிக்கு உத்தரவு

image

சீமான் வழக்கில் ஏப்.2ல் நேரிலோ, காணொலியிலோ ஆஜராக விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. விஜயலட்சுமி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை என காவல்துறை தெரிவித்ததால், ஆஜராக அவகாசம் அளித்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News October 31, 2025

திமுக பிரிவினையை ஏற்படுத்துகிறது: தமிழிசை

image

நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை திமுக செய்வதாக தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹார் மக்களை திமுகவினர் கீழ்த்தரமாக பேசுவதாகவே PM மோடி குறிப்பிட்டதாகவும், அது திமுக குறித்து வைக்கப்பட்ட விமர்சனமே தவிர தமிழர்கள் மீது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பிஹாரிகள் அறிவில்லாதவர்கள், தமிழர்களின் வேலையை பறிப்பவர்கள் என்று கே.என்.நேரு பேசியதை தமிழிசை சுட்டிக்காட்டினார்.

News October 31, 2025

காதல் கைகூட செய்ய வேண்டிய வழிபாடு!

image

நம் வாழ்வின் தேவைகளை கடவுளிடம் வேண்டிப் பெறுவது போலக் காதலையும் வேண்டிப்பெறலாம். காதல் கைகூட காதற் கடவுளர்களான ரதி – மன்மதனை வணங்க வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள மன்மதனின் சிலைக்கு பெண்களும், ரதியின் சிலைக்கு ஆண்களும் அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

News October 31, 2025

3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதால் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மழை விடுமுறையை ஈடுசெய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் முழுநேரம் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!