News March 19, 2024

தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்ட நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தேனி மாவட்ட காவல் துறை 04546-261730, அலைபேசி எண்: 9363873078 அறிமுகப்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Similar News

News August 8, 2025

போடி: கடன் தொல்லையால் பெண் தற்கொலை

image

போடியை சேர்ந்தவர் சீனியம்மாள் (60). இவர் மகளிர் குழு தலைவியாக இருந்து வரும் நிலையில் இவரது குழுவில் 60 பெண்களுக்கு லோன் வாங்கி கொடுத்துள்ளார். அவற்றில் சிலர் லோன் கட்டாததால் இவர் கடன் வாங்கி அதனை செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த சீனியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.

News August 8, 2025

தேனியில் இலவச தையல் மிஷின் APPLY பண்ணுங்க!

image

தேனியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை 04546-254368 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News August 8, 2025

தேனி மக்களே! என்னபா போவாமா?

image

தேனிவாசிகளே! ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை சென்று தரிசித்தால் மனதில் அமைதி பெருகி இன்பம் வழிபிறக்கும். இதற்காகும் பண செலவை நினைத்தாலே நம் தலையே சுத்தும். இதற்காகவே இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணம் அழைத்து செல்ல உள்ளது. ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் இந்த <>லிங்கில<<>> விண்ணப்பியுங்க (அ) 1800 425 1757 என்ற எண்ணுக்கு அழையுங்க. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!