News March 18, 2024
வீட்டு மனை பட்டாவை திரும்பப் பெற உத்தரவிட முடியாது

ஆதி திராவிடர்கள் நலனுக்காக வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 1998இல் 91 பேருக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதுவரை யாரும் வீடு கட்டாததால், மனைகளை திரும்பப் பெற்று அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
Similar News
News September 9, 2025
PHOTO-ஐ பயன்படுத்த கூடாது.. வழக்கு போட்ட ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சையான செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில், தனது தனிப்பட்ட தகவல்கள், வணிக ரீதியாகவோ, வேறு எந்த காரணத்துக்காகவோ தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார். மேலும், தனது அனுமதியின்றி பெயர், போட்டோ, குரல் உட்பட எந்தவொரு விவரத்தையும் பயன்படுத்த ஊடகங்கள், தனிநபர்களுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News September 9, 2025
அதிமுகவை ஒன்றிணைக்க அமித்ஷாவிடம் பேசுவது ஏன்?

மக்களின் பேராதரவு பெற்ற ஒரு கட்சி பல அணிகளாக பிரிந்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவு தான். பிரிந்தவர்களை எப்படி ஒன்று சேர்க்க விரும்புவோர் 1)கட்சியின் மூத்தத் தலைவர்களை, அனுபவஸ்தர்களை அணுகி ஆலோசனை பெறலாம், மத்தியஸ்தம் பேச சொல்லலாம் 2)தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவை திரட்டலாம். ஆனால், அதிமுகவில் எதிர்ப்புக் குரல் எழுப்பும் தலைவர்கள் நேராக ஏன் அமித்ஷாவை சந்திக்கின்றனர்?
News September 9, 2025
செங்கோட்டையன் முடித்த உடன் தம்பிதுரை தொடங்கினார்!

தமிழகம் திரும்பியதும் <<17658301>>செங்கோட்டையன்<<>> பேட்டியளித்த சிறிதுநேரத்தில், டெல்லியில் இருந்த தம்பிதுரை பேட்டியளித்தார். அப்போது, தானும் அமித்ஷாவை சந்தித்து பேசினேன் எனவும், செங்கோட்டையன் உடனான சந்திப்பு குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை என்றும் தம்பிதுரை விளக்கம் அளித்தார். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி கருத்துக் கூற முடியாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.