News March 18, 2024
வீட்டு மனை பட்டாவை திரும்பப் பெற உத்தரவிட முடியாது

ஆதி திராவிடர்கள் நலனுக்காக வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 1998இல் 91 பேருக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதுவரை யாரும் வீடு கட்டாததால், மனைகளை திரும்பப் பெற்று அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
Similar News
News November 8, 2025
மார்க் மீது புகார் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள்

உலகின் 4-வது பெரிய பணக்காரரான மார்க் சக்கர்பெர்க் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். என்ன காரணம் தெரியுமா? அரசு அனுமதி பெறாமல் மனைவியுடன் சேர்ந்து வீட்டிலேயே ‘Bicken Ben School’ என்ற பள்ளியை நடத்தி வந்ததாக அண்டை வீட்டார் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, நகர நிர்வாகம் பள்ளிக்கு தடை விதித்தது. இந்நிலையில், பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக சக்கர்பெர்க் தரப்பு கூறுகிறது.
News November 8, 2025
BREAKING: டிச.1-ல் பார்லிமென்ட் கூடுகிறது

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை பார்லிமென்ட்டில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
News November 8, 2025
மருத்துவ துறையின் லெஜண்ட் காலமானார்

DNA-வின் இரட்டைச் சுருள் வடிவமைப்பை கண்டறிந்தவர்களில் ஒருவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். நவீன உயிரியலில் பெரும் வளர்ச்சிக்கு வழிவகுத்த அந்தக் கண்டுபிடிப்பால், உடலில் மரபணு எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய முடிந்தது. இதனால், மருத்துவம், தடயவியல் போன்ற துறைகளில் கூடுதல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவர முடிந்தது. அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


