News October 23, 2024
விபத்தில் சிக்கிய பெண்: மேயர், கமிஷனர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி 55வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகர் அருகே சாலையில் சென்ற மாடு, இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது மோதி பலத்த காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், மாடுகளின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மேயர் கோ.ராமகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் சுக புத்ரா ஆகியோர் இன்று காலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
Similar News
News December 31, 2025
நெல்லை: செல்போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இங்கே <
News December 31, 2025
நெல்லை: எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தில் 15 காலியிடங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்திற்கு சத்துணவு பணியாளர்கள் காலம் முறை தொகுப்பூதியத்தில் பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 15 இடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 14ஆம் தேதி விண்ணப்பத்திற்கு கடைசி நாளாக உள்ளது.
News December 31, 2025
நெல்லைக்கு புதிய போலீஸ் கமிஷ்னர், டிஐஜி நியமனம்!

நெல்லை போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக மணிவண்ணன், நெல்லை சரக டிஐஜியாக சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை எஸ் பி ஆக நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரசன்ன குமார் இடமாறுதல் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.


