News March 18, 2024

காலையில் டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்

image

காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லது. மோர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வாயுப்பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

Similar News

News October 16, 2025

ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவும் பானம்

image

ஒரு பாத்திரத்தில் 300 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் மிளகு, இடித்த இஞ்சி சேர்த்து கொள்ளுங்கள். இஞ்சி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதித்த பிறகு, அதில் மஞ்சள் பொடியை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கொஞ்சம் வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பிறகு அதில் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளுங்கள்.
நன்கு கலந்து சூடாக அப்படியே குடித்துப் பாருங்கள். உங்கள் ஒற்றைத் தலைவலி குறைய ஆரம்பிக்கும்.

News October 16, 2025

₹12,400 கோடி சொத்து இருந்தும் இது தேவையா?

image

₹12,400 கோடி சொத்து இருந்தும் பான் மசாலா விளம்பரங்களில் ஏன் நடிக்கிறீர்கள் என்று, நடிகர் ஷாருக்கானுக்கு பிரபல யூடியூபர் துருவ் ரதீ கேள்வி எழுப்பியுள்ளார். பான் மசாலா விளம்பரத்திற்காக ஷாருக் ₹100 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ₹12,400 கோடி சொத்து இருக்கும்போது, கூடுதலாக ₹100 கோடி தேவையா எனவும், உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லையா எனவும் யூடியூபர் துருவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 16, 2025

அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

image

‘இட்லி கடை’ படத்தை பாராட்டிய அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி கூறியுள்ளார். படத்தில் எழுத்து, இயக்கம், நடிப்பு என மூன்றையும் சிறப்பாக கையாண்டு அற்புதமான படைப்பை, தனுஷ் வெளிக்கொண்டு வந்திருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு X-ல் பதிலளித்துள்ள தனுஷ், உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும், பாராட்டுகளுக்கும் படக்குழு சார்பில் நன்றி என்றும் நேரம் ஒதுக்கி படம் பார்த்ததற்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!