News October 14, 2024

சிங்கப்பூரில் IPL ஏலம்?

image

2025 IPL வீரர்கள் ஏலத்தை சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சவூதி அரேபியாவின் ரியாத், ஜெட்டாவில் நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அத்தகவல் கூறுகிறது. முன்னதாக, 2024ம் ஆண்டு IPL வீரர்கள் ஏலத்தை துபாயில் பிசிசிஐ நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 17, 2025

அன்புமணியின் நியமனங்கள் செல்லாது: ராமதாஸ்

image

அன்புமணி மேலும் ஓராண்டுக்கு பாமக தலைவராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது என, ராமதாஸ் தலைமையிலான சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியால் நியமிக்கப்பட்ட பதவி நியமனம், அறிவிப்புகள் செல்லாது என்றும், ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியே தொடர்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

போன் செய்தபோது இறப்பு செய்தி: கண்கலங்கிய ஸ்டாலின்

image

பிறந்தநாள் வாழ்த்து கூற போன் செய்தபோது, சின்னம்மா மறைந்துவிட்டார் என்ற செய்தியை வேதனையுடன் விசிக தலைவர் திருமா சொன்னதும், ‘கண்கள் கலங்கினேன்’ என்று CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும், அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும், அவரது (திருமா) உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் நினைத்து துயரம் அடைந்தேன் என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

News August 17, 2025

அப்படி சொல்லவே இல்ல: அந்தர் பல்டி அடித்த அஸ்வின்

image

CSK அணிக்கு டெவால்ட் பிரேவிஸ் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து CSK வீரர் அஸ்வின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு <<17426625>>CSK விளக்கமும்<<>> அளித்திருந்தது. இந்நிலையில், அஸ்வின் தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். பிரேவிஸ் விவகாரத்தில் பிசிசிஐ விதிகளை CSK மீறியதாக நான் சொல்லவில்லை, யார் மீதும் தவறில்லை எனக் கூறி அந்தர் பல்டி அடித்திருக்கிறார் அஸ்வின்.

error: Content is protected !!