News October 8, 2024
கருத்துக்கணிப்பை பொய்யாக்கும் தேர்தல் முடிவு?

ஹரியானாவில் காங்., ஆட்சியைப் பிடிக்கும்; ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், ஹரியானாவில் பாஜக 44, காங்., 40 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் காங்., கூட்டணி 49, பாஜக 22, மற்றவை 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதன் மூலம் கருத்துக்கணிப்பு பொய்த்து போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
Similar News
News August 24, 2025
மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் தீருநீற்றுபச்சிலை!

➤இதன் 4 இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி நீங்கிவிடும்.
➤வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க, ஒரு கைப்பிடி பச்சிலை இலைகளைப் பறித்து நீரில் நன்கு ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் உடல் நறுமணமாக இருக்கும்.
➤காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலையின் சாற்றை, சில சொட்டுகள் விட்டால் வலி நீங்கும்.
➤வாயுத்தொல்லை இருப்பவர்கள், இந்த இலையை பச்சையாக மென்று தின்றால் பிரச்னை சரியாகும்.
News August 24, 2025
நியாயம், அநியாயம் என்று எதுவும் இல்லை: ஸ்ருதிஹாசன்

‘ஏன்மா வம்ப விலை கொடுத்து வாங்குற, உனக்கே இது நியாயமா இல்லையா?’ என ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஸ்ருதிஹாசனிடம் கேட்டுள்ளனர். இதற்கு இன்ஸ்டாகிராமில் கூலாக பதிலளித்துள்ள அவர், ப்ரீத்தி ரோல் துயரத்தில் உள்ளது. எனவே இதில் நியாயம், அநியாயம் என்றும் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இப்படத்தில் தானாக ஒரு சிக்கலை தேடிச் செல்வது போன்று ஸ்ருதியின் ரோல் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்க என்ன நினைச்சீங்க?
News August 24, 2025
சற்றுமுன்: மாதம் ₹2000 பெற விண்ணப்பிக்கலாம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2000 உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோரை இழந்து, உறவினர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு ( ஆண், பெண்), ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதந்தோறும் ₹2000 வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற விரும்புவோர், தகுதியான ஆவணங்களுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.