News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News January 24, 2026
நெல்லை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

நெல்லை மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News January 24, 2026
நெல்லை: கார் மோதி பரிதாப பலி!

நாங்குநேரி கோர்ட்டு பகுதியை சேர்ந்த சன்முகசுந்தரம் (38) நாங்குநேரி சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றினார். இவர் டூவீலரில் நங்குநேரி நம்பி நகர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
நெல்லை: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டூர் பகுதியை சேர்ந்த முஸ்தபா மகன் கலீல் ரகுமான்(50). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பெண் கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரகுமானை கைது செய்தனர்.


