News October 7, 2024
தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்து: நீதிமன்றம் உத்தரவு

தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்தது. தனுஷ்-ஐய்வர்யா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை அக்.19க்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டார்.
Similar News
News August 17, 2025
படம் எடுக்கலாமா?… ஸ்கூல் பசங்களுக்கு ஹேப்பி நியூஸ்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த போட்டிகள் ஆக.20-ல் தொடங்கவுள்ளது. இதில், ‘ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்’ என்ற 3 நிமிட படத்துக்கு கதையுடன் வசனம் எழுதுதல், ‘மரங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் 1 நிமிட படத்தை உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. மார்க் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நீங்க ரெடியா..!
News August 17, 2025
சொத்து பதிவு இனி ரொம்ப ஈசி.. தமிழக அரசின் புதிய மாற்றம்

சொத்துகளை வாங்குவது, விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த TN அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்தாண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம். SHARE IT.
News August 17, 2025
25 மாவட்டங்களில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, செ.பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், க.குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. உங்க ஊருல மழையா?