News August 17, 2025
25 மாவட்டங்களில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, செ.பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், க.குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. உங்க ஊருல மழையா?
Similar News
News December 14, 2025
கலை வண்ணம் நிறைந்த PHOTOS

கலை வண்ணம் நிறைந்த வனவிலங்குகளை பார்த்திருக்கீங்களா? விலங்குகள் ஆபத்தானவை என்றாலும், அதனை படம் பிடிக்கும் விதம் நம்மை ரசிக்க வைக்கிறது. ஓவியம் போல் ரசனையுடன் எடுக்கப்பட்ட சில பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை, உங்களுக்காக மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 14, 2025
சங்கிப் படையே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது: CM

நாட்டிலேயே பாஜகவிற்கு எதிராக Ideological fight செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரே மாநில கட்சி திமுக தான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் தான் அமித்ஷா போன்றவர்களுக்கு எரிச்சலாக உள்ளது என குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த சங்கி படையையே கூட்டிக்கொண்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என சவால் விடுத்துள்ளார். பாஜகவால் வெற்றி பெற முடியாதது தமிழகத்தில் மட்டும் தான் என்றும் கூறியுள்ளார்.
News December 14, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

2004-ல் சுனாமி தாக்கியபோது, சென்னையில் உள்ள ஒருவரது கடையில் 2 கிளிகள் தஞ்சமடைந்துள்ளன. அதன் பசியாற்றிய அந்த கணத்தில் கிளிகளுக்கும் அவருக்கும் இடையேயான காதல் தொடங்கியுள்ளது. அதன் முடிவு, தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிக்கும் உன்னத மனிதராக உருவெடுத்துள்ளார் அந்த <<18542461>>’மக்கள் நாயகன்’ ஜோசப் சேகர்<<>>. வாயில்லா ஜீவன்களின் பசியை போக்கிய அந்த பறவை மனிதரின் உயிரை புற்றுநோய் குடித்தது பெரும் சோகம். RIP


