News March 16, 2024

டிரோன் மூலம் பாதுகாப்புப் பணி

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி எல்லைகளில் டிரோன்கள் மூலம் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கரன்சிகள், போதைப் பொருட்கள் ஊடுருவலை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்றார். மேலும், பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகமும் தடுக்கப்படும் எனக் கூறினார்.

Similar News

News September 1, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகல்?

image

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே EPS மீது அதிருப்தியில் இருந்த அவரை, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர். இந்நிலையில், அவர் தனது முடிவு குறித்து செப்.5-ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சமாதானப் புறா பறக்குமா?

News September 1, 2025

UPI ஃபெயில் ஆயிடுச்சா? இத ட்ரை பண்ணுங்க

image

ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, UPI மூலம் பணம் அனுப்பினால், transaction பெயில் என மெசெஜ் வரும். உடனே கடைக்காரர் சூடாக நம்மளை பார்ப்பார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க, 1)வேறொரு UPI ஆப்பில் முயற்சி செய்யலாம் 2)நெட் பேங்கிங் பயன்படுத்தலாம் 3)கடைகளுக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் காசு வைத்து கொள்ளலாம். 4)டெபிட்/ கிரெடிட் கார்டுகளை உபயோகிக்கலாம். SHARE IT.

News September 1, 2025

Parenting: டிகிரி மட்டும் போதாது.. இதையும் படிக்க வையுங்க..

image

முன்பெல்லாம் டிகிரி முடித்தாலே வேலை என்ற காலகட்டம் மாறி, தற்போது வேலை கிடைப்பதே கடினம் என்ற நிலை வந்துவிட்டது. இதனால் குழந்தைகளை எதை படிக்க வைப்பது என நீங்கள் குழம்ப வேண்டாம். உங்கள் குழந்தைகள் டிகிரி முடிப்பதோடு, AI சார்த்த படிப்புகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், Data Science, அடிப்படை கோடிங், Interior Design, சட்டம் கற்பது அவசியம் என கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

error: Content is protected !!