News March 16, 2024

பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

image

தேர்தல்களில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேர்தல்களில் பணப் பட்டுவாடா மற்றும் அதிகார பலத்தை தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. இதுகுறித்து வரும் புகார்கள் மீது விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Similar News

News August 7, 2025

4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேருக்கு வேலை: CM

image

கடந்த 4 ஆண்டுகளில் அரசு, தனியார்கள் மூலமாக 6,41,664 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ₹10.63 லட்சம் கோடிகள் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் அரசின் 2வது ஆட்சியிலும் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News August 7, 2025

ஆடி வியாழக்கிழமை எந்த தெய்வத்தை வணங்கலாம்?

image

ஆடி மாதம் ஒவ்வொரு கிழமையும் சில தெய்வங்களுக்கு விசேஷ வழிபாடு இருக்கும். அப்படி வியாழக்கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கலாம் என்று பார்ப்போம். இந்நாளில் நாம் குருவாக எண்ணும் எந்த மகான்களைப் போற்றி வணங்கலாம். உதாரணமாக சாய்பாபா, ராகவேந்திரர், ராமானுஜர் போன்ற மகான்களை ஆராதனை செய்யலாம். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படித்தால் கல்வி மேன்மை பெறும் என நம்பப்படுகிறது.

News August 7, 2025

அஜித்துடன் கைகோர்த்த நரேன் கார்த்திகேயன்

image

அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் தமிழரான நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நரேன் தங்களது அணியில் இணைவது பாக்கியம் என அந்நிறுவனம் கூற, வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்துடன் சேர்ந்து பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக நரேன் தெரிவித்துள்ளார். ஃபார்முலா – 1 பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் நரேன் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!