News September 27, 2024

கட்டுக்கட்டாக பணத்தை எண்ணும் பணி தீவிரம்

image

ATM கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சூரில் கொள்ளை நடந்தவுடன் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக திருச்சூர் எஸ்பி இளங்கோ கூறினார். நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானாவின் <<14207793>>மேவாட் கொள்ளைக் கும்பல்<<>>, தென்னிந்தியாவில் 6 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட ATMகளில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 16, 2025

பெண் சூப்பர் ஹீரோ கல்யாணி பிரியதர்ஷன்

image

‘லோகா’ திரைப்படம் மூலம் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக களமிறங்கி உள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். படத்தில் வாம்பயராக மிரட்டியுள்ள கல்யாணியின் சமீபத்திய புகைப்படங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளன. போட்டோக்களை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.

News September 16, 2025

இந்தியா – USA விவகாரம்: இன்று தீர்வு எட்டப்படுமா?

image

இந்தியா – USA இடையே இன்று வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க USA அதிகாரிகள் இன்று இந்தியா வர உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தூதரகம், வர்த்தக சிறப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயம், பால்பண்ணைத்துறையில் இந்திய சந்தையை திறந்துவிட USA வலியுறுத்தி வரும் நிலையில், இந்திய அரசு அதற்கு மறுப்பதால், ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

News September 16, 2025

7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், வரும் 21-ம் தேதி வரையிலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!