News September 27, 2024

கட்டுக்கட்டாக பணத்தை எண்ணும் பணி தீவிரம்

image

ATM கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சூரில் கொள்ளை நடந்தவுடன் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக திருச்சூர் எஸ்பி இளங்கோ கூறினார். நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானாவின் <<14207793>>மேவாட் கொள்ளைக் கும்பல்<<>>, தென்னிந்தியாவில் 6 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட ATMகளில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 3, 2025

FLASH: புதிய குண்டை வீசிய செங்கோட்டையன்

image

திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் புதிய குண்டை வீசியுள்ளார். அதிமுகவில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தலையீடு அதிகமாக உள்ளதாக இபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். மேலும், தன்னால் முடியாததை முடியும் எனச் சொல்லி தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது எனவும் விமர்சித்தார். செங்கோட்டையனின் இந்த தாக்குதல் அரசியலில் புயலை கிளப்பும் என கூறப்படுகிறது.

News November 3, 2025

தெலங்கானா பஸ் விபத்து.. நெஞ்சை உலுக்கும் போட்டோ!

image

தெலங்கனாவின் ரங்காரெட்டியில் நிகழ்ந்த <<18183288>>பஸ் விபத்தில்<<>> சிக்கி, 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பரிதாபமாக மரணமடைந்த 15 மாத குழந்தையும், அக்குழந்தையின் தாயாரும் உயிரின்றி கிடக்கும் போட்டோ பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. பஸ் விபத்து நிகழ்ந்த இடத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்க்க முடியாமல், மீட்பு பணியில் ஈடுபடுவோரும் தவித்து வருகின்றனர்.

News November 3, 2025

BREAKING: தமிழகத்தை உலுக்கிய சம்பவம்

image

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று 3 இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஏர்போர்ட் பின்புறம் உள்ள சாலையில், மாணவியின் ஆண் நண்பரை கொடூரமாக தாக்கிவிட்டு மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். இளைஞர் கோவை GH-ல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!