News September 27, 2024

சொத்து விவரங்களை வெளியிட்ட 13% நீதிபதிகள்

image

இந்தியாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 98 பேர் (13%) மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவர்களில் 80% பேர் கேரளா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 62 நீதிபதிகளில், 5 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை அறிவித்துள்ளனர். தங்கள் சொத்து விவரங்கள் பொதுநலனுக்கு உதவாது என சில நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 18, 2025

SCIENCE: காக்கைகள் உங்களை கொத்துவது ஏன் தெரியுமா?

image

காக்கைகள், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நபரை, சில ஆண்டுகள் கூட ஞாபகம் வைத்து பழிவாங்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. காக்கையின் மூளையில் உள்ள அமிக்தாலா எனும் பகுதிதான், மனிதர்களின் முகங்களை நினைவு வைத்துக்கொள்ள உதவுகிறதாம். எனவே, காக்கையை அச்சுறுத்தும் வகையில் நீங்கள் ஏதாவது செய்திருந்தால் தான், அது உங்கள் தாக்குமாம். காக்கையிடம் குட்டு வாங்கிய அனுபவம் இருக்கா?

News September 18, 2025

வருமான நிலையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது: CEA

image

பின்தங்கிய வருமான நிலையிலிருந்து, நடுத்தரமான வருமான நிலைக்கு வந்ததில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்த இவ்வளவு பெரிய நாடும் சமூக, பொருளாதார மாற்றத்தை ஜனநாயக வழியில் முயற்சிக்கவில்லை என பெருமிதப்பட்டுள்ளார். நம்முடைய வெற்றி பெற்ற திட்டங்களிலிருந்தும் நாம் சிலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News September 18, 2025

மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்காதீங்க: கிருஷ்ணசாமி

image

OPS, சசிகலா, தினகரன் ஆகியோரை சமாளிக்க முடியாமல் EPS திணறுகிறார் என்று கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இதனை அரசியல் ரீதியாக மட்டுமே தீர்க்க வேண்டும் என்ற அவர், இதற்காக மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க கோரி EPS, அமித்ஷாவிடம் கடிதம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!