News September 27, 2024
சொத்து விவரங்களை வெளியிட்ட 13% நீதிபதிகள்

இந்தியாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 98 பேர் (13%) மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவர்களில் 80% பேர் கேரளா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 62 நீதிபதிகளில், 5 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை அறிவித்துள்ளனர். தங்கள் சொத்து விவரங்கள் பொதுநலனுக்கு உதவாது என சில நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 5, 2025
‘MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்க’

50 கிலோ வாட் வரை கட்டண உயர்வில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் குறு நிறுவனங்கள் 120 கிலோ வாட் வரை பயன்படுத்துவதால் இந்த அறிவிப்பு உதவாது என தமிழ்நாடு தொழில் அமைப்புகள் தெரிவித்தன. கோவையில் பேட்டியளித்த இந்த அமைப்பினர், MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சூரிய மின்சக்தி பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கட்டணத்தையும் நீக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
News July 5, 2025
இரவு 10 மணிக்கு மேல் கரண்ட் கட்… ஏன் தெரியுமா?

ரஷ்யாவில் நாளுக்கு நாள் மக்கள்தொகை குறைந்து வருவதால், அதை தடுக்க வித்தியாசமான யோசனைகள் முன்வைத்துள்ளது அதன் ‘பாலியல் அமைச்சகம்’. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வீடுகளுக்கான மின்சாரத்தையும், இன்டர்நெட் இணைப்பையும் கட் செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், தம்பதியினர் உறவில் ஈடுபட வாய்ப்பு அதிகரிக்கும், குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி இருக்கு?
News July 5, 2025
மதம் கடந்த மனிதநேயம்

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தனித்துவமான பண்பாகும் அதனை உணர்த்தும் வகையிலான சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கோவில் பூசாரி ஒருவரின் 5 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக 60 லட்சம் பணம் தேவைப்பட்டது. இதனால் பயாஸ் என்பவரின் உதவியை நாடினார் பூசாரி. சிறுமி நிலை பற்றி இணையத்தில் வீடியோ வெளியிட்ட பயாஸ், 16 1/2 மணி நேரத்துக்குள் 75 லட்சம் வசூலித்து பூசாரியிடம் வழங்கியுள்ளார்.