News September 24, 2024
போலீஸாருக்கு ‘செக்’ வைத்த ரயில்வே துறை..!

பொதுமக்கள் மட்டுமின்றி போலீஸார் பலரும் டிக்கெட் இல்லாமல் ரயில்களில் பயணிப்பது அதிகரித்து வருவதாக ரயில்வே துறை கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு டிக்கெட் இன்றி ரயில்களில் பயணிக்கும் போலீஸாரை பாரபட்சமின்றி பிடித்து அபராதம் வசூலிக்கும்படி அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News August 24, 2025
DMK, TVK தான் போட்டி: பெங்களூர் புகழேந்தி

வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்க்கு என்ன தெரியும் என பலர் கேட்பதாகவும், கட்சி தொடங்கிய 7 மாதங்களில் NTR ஆட்சி அமைத்தார். ஆதலால் அரசியலில் எதுவும் நடக்கும் என கூறினார். EPS-யை முதல்வராக்க வேண்டும் என அண்ணாமலை பேசுவதை பார்க்கும் போது ஏன் அவர் இப்படி தடுமாறிவிட்டார் என தனக்கு தெரியவில்லை என்றார்.
News August 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 24 – ஆவணி 8 ▶ கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶ கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: துவிதியை ▶ சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.
News August 24, 2025
ஓய்வறையில் கம்பீருக்கு வேற முகம்: ரிங்கு சிங்

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மைதானங்களில் எப்போதும் ஆவேசத்துடன் காணப்படக் கூடியவர். அவர் ஓய்வறையில் எவ்வாறு இருப்பார் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். அதில் ஓய்வறையில் கம்பீர் ஜாலியான பாடல்களை கேட்டு உற்சாகமாக இருப்பார் என்றும், அனைவரையும் ஒரே வைப்பில் வைத்து கொள்வதில் கெட்டிக்காரர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீனியர் வீரர்களுடன் ஜாலியாக பழகும் தன்மை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.