News August 20, 2024

அடுத்த பலாத்காரம் வரை காத்திருக்க முடியாது

image

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கை இன்று தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யவே பல மணிநேரம் ஆகி இருக்கிறது. இந்த தாமதத்துக்கு யார் காரணம்? பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. மாற்றம் உடனே வேண்டும். அடுத்த பலாத்காரம் நடக்கும் வரை மாற்றத்திற்காக காத்திருக்க முடியாது” எனக் கடிந்து கொண்டார்.

Similar News

News March 18, 2026

ஸ்டாலினுடன் தொடர்வது ஏன்? வைகோ புதிய விளக்கம்

image

வேண்டா வெறுப்பாக திமுகவுடன் மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்வதாக EPS விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் மதிமுக தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதியின் இறுதிக் காலத்தில் அவருக்கு அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் உள்ளேன் என்றார். அதை நிறைவேற்றும் வகையில் மதிமுக செயல்படுவதாகவும், தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெல்வது உறுதி என்றும் கூறினார்.

News March 18, 2026

அமெரிக்காவில் RSS மீது தடையா? இந்தியா மறுப்பு!

image

RSS மற்றும் RAW மீது தடைவிதிக்க வேண்டுமென US-ன் சர்வதேச மத சுதந்திர <<19396338>>ஆணையத்தின் பரிந்துரையை<<>> மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. இந்த பரிந்துரை உள்நோக்கம் & பாரபட்சமானது என கூறியுள்ளது. இது இந்திய இறையாண்மையை தவறாக சித்தரிக்கும் முயற்சி என்றும், இந்தியா மீது பழிபோடுவதை விடுத்து, US-ல் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் & வெறுப்பு சூழல் ஆகிய பிரச்னைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

News March 18, 2026

செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த CBI

image

கரூர் வழக்கு தொடர்பாக நேற்று CBI விசாரணைக்கு ஆஜரானபோது அவர்கள் கேட்ட கேள்விகள் செந்தில் பாலாஜியை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். விஜய் பங்கேற்ற கூட்டத்தை சீர்குலைக்க, ஆயுதங்களுடன் ஆள்களை அனுப்பினீர்களா? என அதிகாரிகள் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு, இது என் மீது விஜய் தரப்பினர் சுமத்திய அபாண்டமான குற்றச்சாட்டு எனவும், அவர்கள் கூறியதில் துளியளவும் உண்மை இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.

error: Content is protected !!