News August 19, 2024
இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என RMC எச்சரித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தி.மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. தொடர்ந்து, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Similar News
News March 22, 2026
ஆட்சியில் பங்கு கேட்கும் புதுவை அதிமுக

புதுவை NDA கூட்டணியில் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உப்பளம் & உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ரங்கசாமி மீண்டும் CM ஆவதற்கு அதிமுக துணை நிற்கும் என்ற அவர், நிச்சயமாக ஆட்சியில் பங்கு கேட்போம்; தர்மத்திற்கா நாங்கள் அரசியல் கட்சி நடத்துகிறோம் என்றும் கேள்வி எழுப்பினார்.
News March 22, 2026
வாழை விலை தலைகீழாக சரிவு.. விவசாயிகள் கவலை!

TN-ல் வாழைப்பழம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிலோ ₹55 ஆக இருந்த ஏலக்கி ₹30, பூவன் ₹25லிருந்து ₹11 என சரிந்துள்ளது. அதேபோல், 1 கிலோ கற்பூரவாழை ₹13, செவ்வாழை ₹30, நேந்திரன் ₹12-க்கு விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரிப்பு, ஏற்றுமதி சரிவே இதற்கு காரணம் எனக் கூறும் வியாபாரிகள் நாளொன்றுக்கு சுமார் ₹12 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்.
News March 22, 2026
1 லட்சம் டன் கச்சா எண்ணெய்.. சென்னை வந்த ரஷ்ய கப்பல்

ரஷ்யாவில் இருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் எற்றி வந்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. மற்றொரு கப்பல் வரும் 24-ம் தேதி வரும் என்றும் இந்த மாத இறுதிக்குள் மேலும் 2 கப்பல்கள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழி நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நாட்டின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.


