News August 19, 2024
சீமான், விஜய்யிடம் ஆதரவு கோரும் இபிஎஸ்?

சரிந்துவரும் செல்வாக்கை மேம்படுத்தவும், DMKக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை கட்டமைக்கவும் வேண்டிய நிர்பந்தம் ADMKவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டணியில் நாதக, விஜய்யின் தவெக, பாமகவை இடம்பெற வைக்குமாறு மூத்த நிர்வாகிகள் EPS-யிடம் முறையிட, அவரும் அதற்கு பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து மூத்த தலைவர்கள் சிலர் சீமான், விஜய்யுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News March 7, 2026
ஈரான் போர்.. இந்தியாவில் இதன் விலை குறைகிறது

இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியில் 72% மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது அங்கே போர்ச்சூழல் நிலவுவதால் 2 லட்சம் டன் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலிருந்து கப்பல்களில் கொண்டுசெல்லப்பட்ட மேலும் 2 லட்சம் டன் அரிசியும் பாதிவழியிலேயே நிற்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவில் அதன் விலை 7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் குறையலாம்.
News March 7, 2026
விலை உயராது.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹60-ம் உயர்ந்தது. சிலிண்டர் உயர்வால், டீ, காபி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டீ, காபிகளின் விலை உயராது என்று பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
News March 7, 2026
BREAKING: ₹2,300 ஆக உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்தார்

TN அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ₹1,000-லிருந்து ₹1,500 ஆகவும், நடுநிலைப்பள்ளியில் பணிபுரிவோருக்கு ₹1,500-லிருந்து ₹2,300 ஆகவும் ஊதிய உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 38,000 பேர் பயனடைவார்கள் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.


