News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 26, 2025
உதவிக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி

தான்சானியாவில் உள்ள புகழ்பெற்ற கிளிமாஞ்சாரோ சிகரம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால், மருத்துவ அவசர உதவிக்காக நோயாளிகளை ஏற்றிச் சென்றபோது தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பைலட், டாக்டர், வழிகாட்டி & 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை உள்ளூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
News December 26, 2025
ரீரிலீஸாகிறதா ரஜினியின் மூன்று முகம்?

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸான ‘படையப்பா’ படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், 1982-ல் வெளியாகி 250 நாள்களை கடந்து திரையிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘மூன்று முடிச்சு’ படம் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தொழில்நுட்ப பணிகளில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாம். வேறு எந்த ரஜினி படத்தை ரீரிலீஸ் செய்யலாம்? கமெண்ட் பண்ணுங்க.
News December 26, 2025
வங்கதேசத்தின் தலைவிதியை மாற்றும் திட்டம்: தாரிக்

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பெளத்தர்கள் என அனைவருக்கும் வங்கதேசம் சம அளவு சொந்தமானது என BNP செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய அவர் முதலில் ஆற்றிய உரையில், நாட்டில் அமைதியை பேணுவது நமது பொறுப்பு என வலியுறுத்தினார். மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தலைவிதியை மாற்றுவதற்கான ஒரு திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார்.


