News August 8, 2024

150 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் இந்திய நிறுவனங்கள்

image

1736ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாடியா குழுமம், தற்போது விமான போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ராம்தத் கோயன்கா 1820ல் தொடங்கிய RPG குழுமம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி உற்பத்தி துறைகளில் தற்போது செயல்பட்டு வருகிறது. 1857ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதித்யா பிர்லா குழுமம் நிதி, சிமெண்ட், மினரல் துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

Similar News

News December 25, 2025

இடியாப்பத்திற்கு வந்த இடியாப்ப சிக்கல்!

image

சைக்கிள் மற்றும் பைக்கில் இடியாப்பம் விற்பவர்கள் உரிமம் பெறுவது கட்டாயம் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இடியாப்பத்தை முறையாக தயாரிக்காமல் விற்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிப்பது கட்டாயம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

News December 25, 2025

உலகப்போரை நிறுத்திய கிறிஸ்துமஸ் பெருவிழா!

image

1914-ல் முதல் உலகப்போரில் ஜெர்மன்-பிரிட்டிஷ் வீரர்கள் கடுமையாக போரிட்டு கொண்டிருந்த சமயம். டிச., 24-ம் தேதி இரவு, ஜெர்மன் பகுதியில் துப்பாக்கி சத்தத்திற்கு பதிலாக, இனிய கிறிஸ்துமஸ் கீதம் ஒலித்தது. மறுநாள் களத்தில் இருந்த இருநாட்டு வீரர்களும் உணவுகளை பரிமாறி ஃபுட்பால் விளையாடினர். தளபதிகளின் உத்தரவு இல்லாமல் நிகழ்ந்த இந்த ஒருநாள் போர் நிறுத்தம், மனிதநேயத்தின் சாட்சியாக வரலாற்றில் நீடிக்கிறது.

News December 25, 2025

அஜிதா ஹாஸ்பிடலில் அனுமதி.. விஜய் கடும் அப்செட்!

image

தூத்துக்குடி தவெக <<18649222>>நிர்வாகி அஜிதா ஆக்னல்<<>> உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்படாததால் நேற்று முன்தினம் தவெக ஆபிஸ் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதோடு விஜய்யின் காரை வழிமறித்தார். பதவி கிடைக்காத அதிருப்தியில் 2 நாள்களாக சாப்பிடாமல் இருந்த அஜிதா, உடல் நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், விஜய் கடும் அப்செட் ஆகியுள்ளாராம்.

error: Content is protected !!