News August 7, 2024
சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
செப்டம்பர் 17: வரலாற்றில் இன்று

*1879 – பெரியார் ஈ.வெ.ரா பிறந்தநாள். *1908 – ரைட் சகோதரர்களால் ஏவப்பட்ட விமானம் தரையில் மோதியதில், தாமஸ் செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார். *1948 – ஐதராபாத் சமஸ்தானம் இந்திய ஒன்றியத்தில் இணைந்தது. *1949 – திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய C.N.அண்ணாதுரை திமுகவை தொடங்கினார். 2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
News September 17, 2025
IND-ஐ எதிர்கொள்ளும் டெஸ்ட் படையை அறிவித்த WI

IND vs WI மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் வரும் அக்., 2 முதல் 14-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான, 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆஸி., உடனான சமீபத்திய தோல்வியை அடுத்து, அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரபால், அலிக் அதனாஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். சுழல் பந்து வீச்சாளரான கேரி பியர்ரி புதிதாக அறிமுகமாக உள்ளார்.
News September 17, 2025
ராகுலை புகழ்ந்த EX பாக்., வீரர்: பாஜக விமர்சனம்

ராகுல் காந்தியை EX பாக்., கிரிக்கெட் வீரர் <<17729515>>அஃப்ரிடி<<>> பாராட்டியதை பாஜக விமர்சித்துள்ளது. பாகிஸ்தானின் செல்லப் பிள்ளையாக ராகுல் மாறிவிட்டதாகவும், அந்த மக்கள் அவரை தலைவராக ஏற்க கூட தயக்கம் காட்ட மாட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சாடியுள்ளார். இதற்கு, அஃப்ரிடியுடன் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காங்., பதிலடி கொடுத்துள்ளது.