News August 7, 2024
சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
NR காங்கிரஸ் – பாஜக தொகுதி பங்கீடு இறுதியானது!

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக – NR காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி NR காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதை உறுதி செய்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கூட்டணி கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளை பிரித்து கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
News March 14, 2026
மார்ச் 14: வரலாற்றில் இன்று

▶1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது. ▶1998 – சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். ▶1918 – தென்னிந்திய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் பிறந்த தினம். ▶1965 – பாலிவுட் நடிகர் அமீர் கான் பிறந்த தினம். ▶1986 – தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த தினம். 1883 – பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்.
News March 14, 2026
இஸ்ரேல் – ஈரான் போரில் இதுவரை 2,000 பேர் பலி!

கடந்த 2 வாரங்களாக ஈரான், லெபனான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மறுபுறம், இப்போரில் உயிரிழந்த US வீரர்களின் எண்ணிக்கை 13-ஐ எட்டியுள்ளது. இதில் லெபனான் மீதான தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 773 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


