News August 6, 2024
ஆகஸ்ட் இறுதிக்குள் மாணவர்களுக்கு சீருடை

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 4 செட் புதிய சீருடைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளுக்கு முழுமையாக இன்னும் சீருடை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தனித்தனியாக அளவெடுத்து தைப்பதால், அவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
Similar News
News April 2, 2026
சத்தமில்லாமல் ஷமி படைத்த மாபெரும் சாதனை!

DC-க்கு எதிரான ஆட்டத்தில் LSG வீரர் ஷமி, முதல் பந்திலேயே KL ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் ஷமி விக்கெட் வீழ்த்துவது இது 5-வது முறையாகும். 3 முறை இச்சாதனையை நிகழ்த்தி, பிரவின் குமார், உமேஷ் யாதவ், ட்ரெண்ட் போல்ட், லஷித் மலிங்கா, புவனேஷ்வர் குமார், அஷோக் திண்டா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் 2-வது இடத்தில் உள்ளனர்.
News April 2, 2026
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. கண்டிப்பா படிங்க

முன்பதிவு செய்த பயணிகள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. Chart தயார் செய்வதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பே ஏறும் நிலையத்தை மாற்ற முடியும். ஆனால், தற்போது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்புவரை ஏறும் நிலையத்தை மாற்றலாம். ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஏறவில்லையென்றால், அது வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும். SHARE
News April 2, 2026
தாயின் உரிமையை மறுக்க நான் யார்? பிரகாஷ் ராஜ்

சர்ச்சில் நடந்த தனது தாயாரின் இறுதிச்சடங்கில் நாத்திகவாதியான பிரகாஷ் ராஜ் பங்கேற்றது ஏன் என SM-ல் பலர் விமர்சித்து வந்தனர். அதற்கு தனது X பக்கத்தில், தன் தாயார் கடவுளை நம்பினார்; அவர் நம்பிக்கையின்படி நல்லடக்கம் செய்யும் உரிமையை அவருக்கு மறுக்க தான் யார் என கேள்வி எழுப்பியுள்ளார். இது நாம் ஒருவருக்கொருவர் அளிக்கும் அடிப்படை மரியாதை; வெறுப்பை பரப்பும் அரக்கர்கள் இதை உணர்வார்களா என சாடியுள்ளார்.


