News August 6, 2024

வங்கதேச கலவரத்தில் பாகிஸ்தான்: ராகுல் கேள்வி

image

வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் பயங்கர கலவரத்தால், உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, வங்கதேச கலவரத்துக்கு பின்னால் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ராகுல்காந்தி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசுக்கும் இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது என்றார்.

Similar News

News January 19, 2026

உங்கள் தலையில் ₹1.94 லட்சம் கடன் சுமை

image

தேர்தலுக்காக பல இலவசங்கள் அடங்கிய வாக்குறுதிகளை அறிவிக்க DMK, ADMK கட்சிகள் தயாராகிவிட்டன. இதனிடையே, TN-ன் கடன் ₹9.29 லட்சம் கோடி என்றும், ஒவ்வொருவர் மீதும் தலா ₹1.94 லட்சம் கடன் சுமை உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2016-21 ADMK ஆட்சியில் ₹4.80 லட்சம் கோடியாக இருந்த கடன், 4½ ஆண்டு DMK ஆட்சியில் ₹9.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே கவர்ச்சி அறிவிப்புகள் தேவையா என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

News January 19, 2026

பீர் குடித்த இளைஞர்கள் மரணம்!

image

ஆந்திராவில் போட்டி போட்டுக்கொண்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி சித்தூரை சேர்ந்த 6 இளைஞர்கள் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். இதில் மணிகுமார்(34), புஷ்பராஜ்(26) இருவரும் 19 பாட்டில் பீர் குடித்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

News January 19, 2026

சபரிமலை நெய் மோசடி.. 33 பேர் மீது வழக்கு

image

சபரிமலையில் ஏற்கெனவே தங்கம் திருடப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது நெய் மோசடி அம்பலமாகியுள்ளது. போலியான அபிஷேக நெய் பிரசாத பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ₹36.24 லட்சம் மோசடி நடந்தது கண்டறியப்பட்ட நிலையில், தொடர்புடைய 33 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

error: Content is protected !!