News August 6, 2024
வங்கதேச கலவரத்தில் பாகிஸ்தான்: ராகுல் கேள்வி

வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் பயங்கர கலவரத்தால், உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, வங்கதேச கலவரத்துக்கு பின்னால் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ராகுல்காந்தி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசுக்கும் இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது என்றார்.
Similar News
News March 18, 2026
வங்கிக் கணக்கில் ₹6,000.. முக்கிய செய்தி வெளியானது

PM KISAN திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 (₹2,000 வீதம் 3 தவணைகளாக) வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தனித்துவ விவசாய அடையாள எண்ணும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், விவசாய அடையாள எண் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு மீண்டும் அடையாள எண் வழங்கும் பணிகள் தொடங்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2026
BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்று காலை 1 அவுன்ஸ் $9 உயர்ந்த நிலையில், மாலையில் $150 குறைந்து $4,851-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $2.97 குறைந்து $76.95-க்கு விற்பனையாகிறது. இதன் எதிரொலியால், நாளை இந்திய சந்தையில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத சரிவைச் சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 18, 2026
தாக்கப் போகிறோம்… சொல்லி அடிக்கும் ஈரான்

அடுத்த சில மணி நேரங்களில் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்கள் & சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. UAE, சவுதி அரேபியா & கத்தாரில் உள்ள ஆலைகளின் செயற்கைகோள் படங்களையும் வெளியிட்டுள்ள ஈரான் ராணுவம் அந்த ஆலைகளுக்கு அருகிலுள்ள தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக்கொண்டுள்ளது.


