News August 6, 2024

இரவோடு இரவாக 22 பேர் கைது

image

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த அவர்கள், விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகம் அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர் கைது சம்பவங்கள், மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் இலங்கை வசமுள்ளன.

Similar News

News August 13, 2025

வீட்டுக் கடனை அடைக்க ஈசியான வழி..!

image

பொதுவாக வீட்டுக் கடன் விஷயத்தில், ஆண்டுக்கு ஒரு EMI தொகையை கூடுதலாக செலுத்தி விரைவாக கடனை அடைத்து பணத்தை சேமிக்கலாம். அதைவிட சிறந்த வழி ஸ்டெப்-அப் EMI முறை. ஆண்டு வருமானம் அதிகரிப்பதற்கு ஏற்ப EMI தொகையை அதிகரிப்பதே இந்த முறையாகும். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு ₹1 கோடி வீட்டுக் கடன் பெற்றிருந்தால், அதனை 9 ஆண்டுகள் 8 மாதங்களில் அடைத்து ₹52 லட்சம் வரை வட்டியை சேமிக்க முடியும். SHARE IT.

News August 13, 2025

‘மதராஸி’ படத்தின் கதை இதுதானா?

image

‘மதராஸி’ படம் அடிப்படையில் காதல் கதையாம். இந்த காதலால் தமிழ்நாட்டில் பணியாற்றும் படக்குழுவிற்கும், வட இந்திய மாஃபியா கும்பலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தியாகங்கள், பழிவாங்கலை சேர்த்து முருகதாஸ் படமாக உருவாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். முன்னதாக, கஜினியும், துப்பாக்கியும் சேர்ந்ததுதான் இந்த படம் என முருகதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 5-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.

News August 13, 2025

இந்தியாவில் நுழைய போட்டி போடும் உலக நிறுவனங்கள்

image

ஸ்டார்லிங்க்கிற்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், உலகளவில் உள்ள Satcom நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன. லக்ஸம்பர்க்கின் Intelsat, பிரிட்டனின் Inmarsat, சிங்கப்பூரின் டெலிகாம், கொரியாவின் KT SAT, தாய்லாந்தின் IPSTAR, இந்தோனேஷியாவின் PT Telekomunikasi உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைத்துள்ளன. ஏற்கெனவே அமேசானின் Kuiper அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.

error: Content is protected !!