News August 6, 2024

இரவோடு இரவாக 22 பேர் கைது

image

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கைக்கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த அவர்கள், விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகம் அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர் கைது சம்பவங்கள், மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் இலங்கை வசமுள்ளன.

Similar News

News January 16, 2026

ஜனவரி 16: வரலாற்றில் இன்று

image

*1945 – 2-ம் உலகப்போரில் தோல்வி அடைந்ததால் ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார். *1991 – அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்ததால், வளைகுடாப் போர் ஆரம்பமானது. *1993 – விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர். *1978 – நடிகர் விஜய் சேதுபதி பிறந்தார்.

News January 16, 2026

போர் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவு எண்கள் அறிவிப்பு

image

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் மூளும் சூழல் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் கவனமாக செயல்பட அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியர்கள் தேவையில்லாமல் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என கூறியுள்ள தூதரகம், +972-54-7520711, +972-54-3278392 ஆகிய அவசரகால உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

News January 16, 2026

ஜனநாயகத்தை கொல்லும் முயற்சி: உத்தவ் தாக்கரே

image

நேற்று நடந்த <<18868876>>மும்பை நகராட்சி தேர்தலில்<<>> பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்தை கொல்லும் முயற்சி எனவும், மாநில தேர்தல் ஆணையரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, ECI இணையதளத்தில் தங்களது பெயர் இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி திருப்பி அனுப்பப்பட்டதாக பலரும் புகாரளித்திருந்தனர்.

error: Content is protected !!