News August 6, 2024
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்: திருமா

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஒவ்வொரு சமூகமும் அவரவர் வலிமைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டைப் பெற முடியுமென விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பி.சி, எம்.பி.சி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் எனக் கூறிய அவர், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 21, 2026
VIRAL: அமிதாப் பச்சன் வீட்டில் தங்கத்தில் டாய்லெட்!

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா, 2016-ல் எடுத்த செல்ஃபி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சனோடு ‘பிங்க்’ படத்தில் நடித்த போது விஜய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தங்க டாய்லெட் முன்பு செல்ஃபி எடுத்துள்ளார். அந்த செல்ஃபி உள்பட அமிதாப்புடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பகிர்ந்து, 2016 தனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாக அமைந்ததாக அவர் தற்போது பதிவிட்டுள்ளார்.
News January 21, 2026
ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

பாமக (அன்புமணி), அமமுக என NDA கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன. அதேநேரம், திமுக, மாற்றுக் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை இணைத்து வருகிறது. இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ், கூட்டணி தொடர்பாக இன்று மாலை தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளாராம். எனவே, அவரது முடிவும் நாளைக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பார்?
News January 21, 2026
RR, RCB-க்கு கெடு விதித்த BCCI

ஜன.27-ம் தேதிக்குள் தங்களது சொந்த மைதானங்களை உறுதிப்படுத்துமாறு RR, RCB அணிகளுக்கு BCCI காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18497857>>பெங்களூரு மைதானத்தில்<<>> கடந்த ஜூன் மாதம் கூட்டநெரிசலில் 11 பேர் பலியானதை அடுத்து, அங்கு இதுவரை ஒரு போட்டி கூட நடத்தப்படவில்லை. அதேபோல், கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல் நடைபெறாததால், ஜெய்பூரில் போட்டி நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


