News August 5, 2024

ஒடிஷாவில் பனைமரம் அதிகம் வளர்ப்பதன் காரணம் இதுதான்!

image

மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அதிக அளவிலான பனை மரங்களை வளர்க்க ஒடிஷா அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 19 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மற்ற மரங்களை விடவும் பனை மரங்கள் உயரமாக இருப்பதால் அவை மின்னலை எளிதில் தடுக்கும் தன்மை கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒடிஷாவில் கடந்த 11 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 3,790 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News March 22, 2026

Surety வேண்டாம்.. ₹20 லட்சம் கடன் தரும் திட்டம்

image

முத்ரா கடன் திட்டத்தின் கீழ், ஏழை எளியோரும் தொழில் தொடங்கி, தொழில்முனைவோராக மாற ₹20 லட்சம் வரை எந்த பிணையமும் இல்லாமல் கடன் கிடைக்கிறது. இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் பெறலாம். இத்திட்டத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள https://www.mudra.org.in/ தளத்தை பார்வையிடுங்கள். SHARE.

News March 22, 2026

தங்கம் விலை சவரனுக்கு ₹25,000 சரிவு.. மேலும் குறையுமா?

image

தங்கம், கடந்த ஜனவரி இறுதியில் புதிய உச்சமாக 1 சவரன் ₹1,34,400-க்கு விற்பனையானது. அதன் பின்னர், ஏற்றம், இறக்கம் என கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி இன்று ₹1,08,960 ஆக உள்ளது. அதாவது சவரனுக்கு ₹25,440 குறைந்துள்ளது. தங்கம் விலை மேலும் குறையுமா? தற்போது வாங்கலாமா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது தங்கம் விலை சில வாரங்களுக்கு சரிந்து பின்னர் மீண்டும் உயரும் எனக் கூறியுள்ளனர்.

News March 22, 2026

டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் ஈரான்..

image

48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானின் மின்சக்தி நிலையங்கள் மீது தாக்கல் நடத்தப்படும் என்று <<19445887>>டிரம்ப்<<>> எச்சரித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான், எங்களை குறிவைத்தால் பதிலுக்கு USA-வுக்கு தொடர்புடைய IT கட்டமைப்புகள், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளை குறிவைப்போம் என எச்சரித்துள்ளது. இதன்மூலம், ஹார்முஸை திறக்கும் முடிவில் தாங்கள் இல்லை என ஈரான் தெளிவுப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!