News August 5, 2024
ஐந்து மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு

நாமக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் MR.விஜயபாஸ்கர் தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்துள்ளது. நாமக்கல், கரூர் சிபிசிஐடி போலீசார் இணைந்து கரூரில் உள்ள கட்டுமான நிறுவனம், சேலம் சாலையில் உள்ள ஜி.ஆர்.எம் மற்றும் பொன் நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 13, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியானது BIG UPDATE

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதிகளை நாளை மறுநாள்(மார்ச் 15) அறிவிக்க ECI திட்டமிட்டுள்ளதாம். நாளையுடன் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து, தேர்தல் தேதியை CEC ஞானேஷ் குமார் அறிவிக்க உள்ளார். தமிழகத்திற்கு ஏப்.23-ம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 13, 2026
விஜய்யை விளாசிய நடிகை ரஞ்சனா நாச்சியார்

தவெகவில் இருந்தபடியே, நடிகை ரஞ்சனா நாச்சியார் விஜய்யை சாடி வருகிறார். நேற்று தவெக ஆர்ப்பாட்டத்தில், நாம் ஆட்சிக்கு வந்தால் நமது மா.செ.,க்கள் மீதான FIR-களை delete செய்து விடுவோம் என ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், நீங்கள்(விஜய்) CM ஆக விரும்பினால், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வேண்டும் (அ) சரியான அரசியல் அறிவு இருப்பவர்களை அனுப்ப வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசின் புதிய அறிவிப்பு வெளியானது

சமையல் சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இதுதொடர்பான செய்திகள் வெளியிடும் டிவி சேனல்கள் ஒரே வீடியோ/போட்டைவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாமல், தேதி & நேரத்துடன் ஒளிபரப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், மாநில அரசுகள் மாவட்ட அளவில் சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


