News August 5, 2024
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தனக்கு ஜாமின் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே, விசாரணையை தள்ளிப்போட ED முயல்வதாக, செந்தில்பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால் இதனை மறுத்த ED தரப்பு, விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
Similar News
News February 8, 2026
ஏழை எளிய மக்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழகத்தில் ஆட்சேபனையற்ற அரசுப் புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள், தங்கள் நிலத்தை வரன்முறைப்படுத்தி பட்டா பெற்றுக்கொள்ள அரசு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. சென்னை போன்ற மாநகரங்களை ஒட்டியுள்ள ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களின் நில ஆவணங்களுடன் உரிய வருவாய்த் துறை அலுவலகங்களை அணுகி, பிப்.28-க்குள் விண்ணப்பித்து, நில உரிமையை பெற்றுக்கொள்ளலாம்.
News February 8, 2026
இந்திய அணி வரலாறு படைக்கிறது

அமெரிக்காவை வென்றதன் மூலம், T20 WC-ல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. 2024 முதல் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், தெ.ஆப்.,வை (2024-ல் 8 வெற்றிகள்) முந்தியுள்ளது. ஒருநாள், T20 போட்டிகள் உட்பட WC-ல் ஒட்டுமொத்தமாக 100 வெற்றிகளை இந்திய அணி நிறைவு செய்துள்ளது. ஆஸி.,க்கு பிறகு (108) இந்த சாதனையை எட்டிய 2-வது அணி இந்தியா.
News February 8, 2026
திமுக கூட்டணியில் VCK தொடர்கிறது: திருமா

கடந்த 2 நாள்களாக அரசியலில் விவாதப்பொருளாக இருப்பது திமுக கூட்டணிக்குள் PMK (ராமதாஸ்) VCK வெளியேறும் என்பதுதான். இதை மையப்படுத்தி விசிகவினரும், பாமகவினரும் சோஷியல் மீடியாவில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் விசிக தொடருவதாகவும், திருபுவாதங்களுக்கும், அவதூறுகளுக்கும் இடம் தரும் வகையில் விசிகவினர் கருத்துகள் அமைந்துவிடக்கூடாது எனவும் திருமா அறிவுறுத்தியுள்ளார்.


