News June 19, 2024

மாநகராட்சி பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம்

image

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராமன் ஜிபி மற்றும் சின்ன எலசகிரி பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஜி.இ.இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி ரூ.8 லட்சம் மதிப்பின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த மையத்தை மேயர் எஸ்.ஏ.சத்யா திறந்து வைத்தார்.

Similar News

News March 14, 2026

மனு கொடுத்த 2மணி நேரத்தில் பட்டா – கலக்கிய துணை முதல்வர்!

image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், சூளகிரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் சங்கீதா வீட்டுமனை வேண்டி மனு அளித்தார். ​மனுவைப் பெற்ற 2 மணி நேரத்திலேயே அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பட்டா வழங்கப்பட்டது. நேற்று (மார்ச் 13) நடைபெற்ற இந்த விழாவில் மக்களின் கோரிக்கையை மின்னல் வேகத்தில் நிறைவேற்றிய தமிழக அரசின் செயலை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பாராட்டி வருகின்றனர்.

News March 14, 2026

கிருஷ்ணகிரி: பழிக்குப் பழி – வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 2016-ல் நடந்த கொலைக்கு பழிவாங்க, சீனிவாசன் என்பவரை அரிவாளால் வெட்டிய கார்த்திக் (28) என்பவருக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி எம்.ஜெயமணி, கார்த்திக்கிற்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து இன்று உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 14, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!