News June 18, 2024
மீண்டும் உங்களை தேடி ‘மனதின் குரல்’

3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, வானொலி மூலம் மக்களுடன் உரையாற்றி வந்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கவுள்ளார். அதன்படி, வரும் 30ஆம் தேதி முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பாகிறது. இந்நிலையில், எந்த தலைப்பில் பேசுவது என்பது குறித்து MyGov Open Forum, NaMo செயலி மற்றும் 1800 11 7800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 14, 2025
‘கும்கி 2’ படத்தை வெளியிட HC அனுமதி

பிரபு சாலமன் வாங்கிய கடனுக்காக ‘கும்கி 2’ படத்தை வெளியிட சென்னை HC <<18267148>>இடைக்கால தடை<<>> விதித்திருந்தது. இந்நிலையில் பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே, வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட HC, ‘கும்கி 2’ படத்தை வெளியிட அனுமதி கொடுத்தது. அதேநேரம் ₹1 கோடியை கோர்ட்டில் செலுத்த பிரபு சாலமனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
20 ஆண்டுகளில் RJD சந்தித்த பெருந்தோல்வி

பிஹாரில் மிக சக்திவாய்ந்த அரசியல் கட்சியான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), 2005-க்கு பிறகு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 2005-ல் ராப்ரி தேவி முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பு அலையில் நிதிஷ்-பாஜக கூட்டணி வென்றது. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிதிஷ் – பாஜக கூட்டணி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான RJD-யை வீழ்த்தி ஆட்சியை தக்க வைத்துள்ளது. RJD தற்போது 24 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.
News November 14, 2025
சற்றுமுன்: விடுமுறை… 3 நாள்களுக்கு அரசு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல இன்றுமுதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 920 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், TNSTC செயலி, www.tnstc.in இணையதளம் மூலம் சுமார் 15,000 பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீங்க டிக்கெட் புக் பண்ணியாச்சா?


