News June 17, 2024

ஒரே வருடத்தில் 4 பயங்கர ரயில் விபத்துகள்

image

அடுத்தடுத்த தொடர் விபத்துக்களால் இந்திய ரயில்வே துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 2023 ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவில் பாலசோர் ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபரில் விஜயநகரத்தில் 2 ரயில்கள் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர். இம்மாதம் 2ஆம் தேதி பஞ்சாபில் ஃபதேகர் சாஹேப்பில் நடந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். இன்று மேற்குவங்கத்தில் ஏற்பட்ட ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

Similar News

News March 14, 2026

சிலிண்டர்.. காலையிலேயே மகிழ்ச்சி அறிவிப்பு

image

வணிக சிலிண்டரைத் தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவலால், பொதுமக்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில், சமையல் சிலிண்டர் தொடர்பாக பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்; அதன் உள்நாட்டு உற்பத்தி 30% அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். மேலும், தேவை இருந்தால் மட்டுமே ஆன்லைனில் சிலிண்டரை முன்பதிவு செய்யவும் கேட்டுக்கொண்டார்.

News March 14, 2026

கறார் காட்டும் திமுக.. கடுகடுப்பில் கம்யூனிஸ்டுகள்!

image

2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் சில கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக குறைத்துள்ளது. CPM-க்கு 4, CPI-க்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை கறார் காட்டுவதால், இரு கட்சிகளும் நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளன. அந்த வகையில், இன்று காலையில் CPM நிர்வாகக் குழுக் கூட்டமும், நாளை CPI நிர்வாகக் குழுக் கூட்டமும் நடக்க உள்ளன. கடந்த தேர்தலில் இரு கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.

News March 14, 2026

பேரம் பேசும் அரசியல்வாதி பிரேமலதா: விந்தியா

image

தேமுதிக என்றாலே தேய்ந்து முடிந்த திக என விந்தியா விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், மண்டபத்துக்காக கருணாநிதியை எதிர்த்து கட்சியை ஆரம்பித்தார் விஜயகாந்த். ஆனால் தம்பியின் MP சீட்டுக்காக, ஸ்டாலினை அண்ணா என கூப்பிட்டு பிரேமலதா கூட்டணி சேர்ந்துவிட்டார் என்றார். எந்த கொள்கையும் இன்றி, கணவர் கொடுத்த கட்சியை வைத்து பேரம் பேசி வியாபாரம் செய்கிற ஒரே அரசியல்வாதி பிரேமலதா தான் எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!