News June 17, 2024

உச்சநீதிமன்றம் அதிகாரிகளை நியமித்து விசாரிக்க வேண்டும்

image

நீட் குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிகாரிகளை நியமித்து, விசாரணை நடத்திட வேண்டும் என மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், நீட் விவகாரத்தை பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் கூறிய அவர், எதிர்காலத்தில் இத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 20, 2026

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா CPM?

image

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளுக்கு கீழ் தருவதை CPM ஏற்க மறுக்கிறது. இதுதொடர்பாக திமுகவும், CPM-மும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 5 தொகுதிகளை ஏற்று திமுக கூட்டணியில் தொடர்வதா, அல்லது தவெகவுடன் கூட்டணிக்கு செல்லலாமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 20, 2026

BREAKING: இரவில் சந்திப்பு.. கூட்டணி கணக்கு மாறுகிறது

image

டெல்லியில் நேற்றிரவு அமித்ஷாவை சந்தித்த EPS, தொகுதி பங்கீடு இழுபறி குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், பாஜக 30 தொகு​தி​கள் கேட்ட நிலை​யில், 25 தொகு​தி​களை ஒதுக்​கு​வ​தாக EPS தெரி​வித்​தத​தாக கூறப்​படு​கிறது. அதேபோல், பாமகவுக்கு 22, அமமுகவுக்கு 6, தமாகாவுக்கு 3 தொகுதிகளையும் அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால் விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என தெரிகிறது.

News March 20, 2026

விஜய் டெபாசிட்டை இழப்பார்: அர்ஜூன் சம்பத்

image

அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாக்குகளை பிரிக்கும் வேலையைத் தான் தவெக செய்வதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். ஆனால் தவெகவின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும், 234 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழப்பார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டு தவெகவை இயக்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!