News June 17, 2024
உச்சநீதிமன்றம் அதிகாரிகளை நியமித்து விசாரிக்க வேண்டும்

நீட் குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிகாரிகளை நியமித்து, விசாரணை நடத்திட வேண்டும் என மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், நீட் விவகாரத்தை பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் கூறிய அவர், எதிர்காலத்தில் இத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 14, 2025
யோசித்து கூட பார்க்காத வகையில் தண்டனை: அமித்ஷா

டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். இனி இது போன்ற சம்பவத்தை செய்ய வேண்டும் என யாரும் எண்ணாத வகையில், அந்த தண்டனை மிகக்கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்து கொள்ளாது என்பதை உலகிற்கு உணர்த்தும் செய்தியாக அது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி: தேஜஸ்வி

பிஹாரில் இன்றைய வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி நடப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் வெற்றியை அறிவிப்பதை தாமதப்படுத்தி, NDA கூட்டணி வெற்றியை முதலில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


