News June 16, 2024
ஆடு, மாடுகளை போல் மக்களை அடைத்து வைக்க முடியுமா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது மக்களை ஆடு, மாடுகளைப் போல திமுக அடைத்து வைத்ததாக இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் முத்துசாமி, இந்தக் காலத்தில் யாராவது மக்களை அடைத்து வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஈரோடு கிழக்கில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றார்.
Similar News
News March 4, 2026
மக்களை விட பணம்தான் திமுகவுக்கு முக்கியமா? சீமான்

அனைத்து குற்றங்களுக்கும் காரணமான கஞ்சா விற்பனையை திமுகவால் தடுக்க முடியவில்லை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நாங்குநேரி கொலைக்கு கண்டனம் தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியும் திமுக குறைந்தபட்சம் மதுக்கடைகளை கூட மூடவில்லை என்றார். மேலும், இதை செய்வதில் திமுகவிற்கு என்ன தயக்கம் எனவும் மக்களின் பாதுகாப்பைவிட அரசின் வருமானம்தான் திமுகவுக்கு முக்கியமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 4, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 3 நாள்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $222.88 (இந்திய மதிப்பில் ₹20,426) குறைந்து $5,129.72-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $6 குறைந்து $83.21-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
News March 4, 2026
திமுகவுக்கு இந்த அகம்பாவம் இல்லை: ரகுபதி

NDA கூட்டணி என்பது இடியாப்ப சிக்கல் போன்றது. அதில், யார் பெரியவர் என்பது இதுவரை தெரியவில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அதையும், திமுக கூட்டணியையும் ஒப்பிட முடியாது என்ற அவர், மக்களிடம் சாதனைகளை சொல்லியே வாக்குகளை பெறமுடியும் என்றார். மேலும், தேர்தலில் சவால்கள் இல்லை என்று அகம்பாவமாக சொல்ல முடியாது எனவும் திமுக எது வந்தாலும் சமாளிக்கும் என்றும் பேசியுள்ளார்.


