News June 16, 2024

ஆடு, மாடுகளை போல் மக்களை அடைத்து வைக்க முடியுமா?

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது மக்களை ஆடு, மாடுகளைப் போல திமுக அடைத்து வைத்ததாக இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் முத்துசாமி, இந்தக் காலத்தில் யாராவது மக்களை அடைத்து வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஈரோடு கிழக்கில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றார்.

Similar News

News January 18, 2026

போராட்டத்தில் குதிக்கும் புதிய சங்கம்

image

அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டாக ஜாக்டோ-ஜியோ குழு இருந்தது. இந்த குழுவின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத உறுப்பினர்களால் போட்டா-ஜியோ என்ற அமைப்பு உருவானது. இந்த 2 சங்கங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக ஆக்டோ-ஜியோ என்ற சங்கம் உருவாகியுள்ளது. இந்த சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

News January 18, 2026

₹900 கோடியை நெருங்கும் மது விற்பனை

image

பொங்கல் திருநாளையொட்டி 2 நாள்களில் (ஜன. 14,15) மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியானது. 4 நாள் கொண்டாட்ட முடிவில் விற்பனை ₹900 கோடியை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பொங்கலுக்கு 4 நாள்களில் ₹725 கோடிக்கு விற்பனையானது. இந்தாண்டு மது விற்பனை விவரம் வெளியான நிலையில், பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

News January 18, 2026

அதிமுக கூட்டணியில் விஜய்? முடிவை சொன்னார்

image

புதுக்கட்சி ஒன்று விரைவில் NDA கூட்டணிக்கு வரும் என EPS கூறி வருகிறார், அது தவெக என்றால் சந்தோஷம் என பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் கூறியுள்ளார். அதேநேரம், NDA கூட்டணியின் CM வேட்பாளர் EPS தான் என தெளிவாக அறிவித்து விட்டோம்; அதனால் CM வேட்பாளர் நான் தான் எனக்கூறும் விஜய்யுடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை என்றும் கூட்டணி குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!