News June 6, 2024

கர்நாடக அமைச்சர் ராஜினாமா

image

கர்நாடக அமைச்சர் ராகவேந்திரா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மகரிஷி வால்மிகி பழங்குடியின வளர்ச்சி வாரியத்தின் ₹88.62 கோடி முறைகேடாக பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, அதிகாரி சந்திரசேகரன் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ராகவேந்திராவுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Similar News

News August 8, 2025

ஆணுறுப்பில் மிளகாய் பொடி.. அஜித் மரண வழக்கில் திருப்பம்

image

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், சிபிஐ விசாரணையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவி அஜித்தை போலீஸ் சித்ரவதை செய்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்நிலையில், தனிப்படை போலீஸுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி கொடுத்ததே அஜித்தின் நண்பர் பிரவீன் குமார்தான் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.

News August 8, 2025

₹50,925 சம்பளம்.. மத்திய அரசில் 550 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 550 Administrative Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 21- 30 வயதுக்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்டமாக தேர்வு நடைபெறும். ₹50,925- ₹90,000 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 30-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

News August 8, 2025

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி.. அமைச்சர் தகவல்

image

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பரப்புரைக்கு இடையே <<17339627>>பிரேமலதா<<>>, LK சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோரை சந்தித்து அதிமுக Ex அமைச்சர் KC வீரமணி பேசினார். கூட்டணிக்கு அச்சாரமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதாவை சந்தித்ததாகவும், தங்களது கூட்டணியில் தேமுதிக தொடர்வதற்கு அதிமுக தயார் எனவும் வீரமணி தெரிவித்துள்ளார். சீக்கிரமே கூட்டணி முரசு கொட்டுமா?

error: Content is protected !!