News May 22, 2024
E-KYCக்கு மே 30 வரை கெடு?

சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய E-KYC கட்டாயம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மே 30-க்குள் E-KYC அப்டேட் செய்யாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படும் என கேஸ் ஏஜென்சிகள் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன. இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில், கேஸ் ஏஜென்சிகள் தனித்து செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News August 18, 2025
CPR-யை பாஜக தேர்வு செய்தது ஏன்? பின்னணியில் புது கணக்கு

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக CP. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை கணக்கிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொங்கு பகுதிக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை மக்கள் மனதில் பதியவைத்தால், இப்பகுதியில் ஏற்கனவே வலுவாக உள்ள அதிமுக, பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
News August 18, 2025
ஆகஸ்ட் 18: வரலாற்றில் இன்று

1945 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம்.
1954 – தமிழக அரசியல்வாதி வி.கே.சசிகலா பிறந்ததினம்.
1928 – சென்னை மியூசிக் அகடாமி துவக்கமானது.
1227 – மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கான் மறைந்த தினம்.
1920 – அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் அதிகாரப்பூர்வமானது.
News August 18, 2025
வீண் செலவுகளுக்கு தமிழகம் முதலிடம்: அன்புமணி

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளை செய்வதில் பின்தங்கியுள்ள தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் முதலிடத்தில் இருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனம் உருவாக்குவதற்காக ₹4,155.74 கோடி மட்டுமே செலவிட்டிருப்பதாகவும், இது கடந்த நிதியாண்டைவிட 17.57% குறைவு என்றும் தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களில் இது உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.