News May 15, 2024

ராஜஸ்தான் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்தது

image

ராஜஸ்தான், ஜுன்ஜுனு பகுதியில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கம் இயங்கி வருகிறது. நேற்றிரவு இந்த சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் லிஃப்டுக்குள் 14 பேர் சிக்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 12, 2026

பூமியை நோக்கி வரும் 600 கிலோ ஆபத்து!

image

நாசா 2012-ல் விண்ணில் ஏவிய 600 கிலோ எடை கொண்ட Van Allen Probe A விண்கலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பூமிக்கு திரும்புகிறது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான துண்டுகள் தண்ணீரில் விழும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது பூமியில் எங்கு விழும் என்று தெரியாததால், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

News March 12, 2026

349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. இன்றே கடைசி!

image

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <>upsc.gov.in<<>> தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹57,000 – ₹1.77 லட்சம் வரை கிடைக்கும். SHARE.

News March 12, 2026

20 ஆண்டுகளாக Ex.CM-ஐ கொல்ல ஆசை.. வாக்குமூலம்

image

பரூக் அப்துல்லா மீது <<19359220>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்தியதாக ஜம்முவை சேர்ந்த கமல் சிங்(63) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 20 வருடங்களாக ஃபரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன் என்ற அவர் இதுவே தன்னுடைய நோக்கம் எனவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேலும் ஃபரூக்கை கொல்வதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்தது. ஆனால் அவர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!