News May 15, 2024
சுசித்ரா குற்றச்சாட்டுக்கு முன்னாள் கணவர் விளக்கம்

நடிகர் கார்த்திக் குமார் மீது அவரது முன்னாள் மனைவி சுசித்ரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில், கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், இதை திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கார்த்திக் குமார், தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால், அதற்காக வெட்கப்பட போவதில்லை, அது பெருமையான விஷயம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை

பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் கெலன் முரேன். இவர் கன்னியாகுமரியில் நிலம் கிரையம் பெற்றுள்ளார். அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மாவட்ட எஸ். பி. யிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 23 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 11, 2026
ஏழுமலையான் பக்தர்களுக்கு TTD-ன் முக்கிய அறிவிப்பு!

ப்ரீ & ₹300 தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன லைனில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என TTD தெரிவித்துள்ளது. மேலும், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவோ அல்லது தாமதமாகவோ வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 16-ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளதாம். நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.
News March 11, 2026
சீன நிறுவனங்களின் முதலீடு.. விதிகளை தளர்த்திய இந்தியா

அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகளை மத்திய அரசு திருத்தி அமைக்க உள்ளது. கல்வான் மோதலுக்கு பின் சீனா உள்பட எல்லை நாடுகளின் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது மத்திய அரசு அந்த விதிகளை தளர்த்தினால் இனி அந்த நாடுகளிலிருந்து முதலீடுகள் எளிதாக வரும். இது வர்த்தக உறவுகளை மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கும்.


