News March 12, 2026
பண்ருட்டி: மாணவி படுகொலை – MLA கண்டனம்

பண்ருட்டி MLA வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது மனதை உலுக்கும் துயரச சம்பவமாகும். இக்குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென’’ தெரிவித்துள்ளார்.
Similar News
News April 6, 2026
கடலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

கடலூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News April 6, 2026
கடலூர்: 5,538 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி என 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 3099 மூத்தகுடிமக்கள், 2439 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 538 பேர் தபால் வாக்கு அளிக்க படிவம் வழங்கி உள்ளனர். இவர்கள் தபால் வாக்கு அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News April 6, 2026
கடலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


