News May 14, 2024
அவதூறு வழக்கில் பாஜக வேட்பாளருக்கு கோர்ட் உத்தரவு

அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ஆம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் எதுவும் பயன்படுத்தவில்லை என தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வழக்கில் இன்று இபிஎஸ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 28, 2026
போரில் இணைந்த குழு.. இஸ்ரேல் மீது முதல் தாக்குதல்

ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதன் மூலம் போரில் அதிகாரப்பூர்வமாக ஹூதி குழு இணைந்துள்ளது. ஈரான் ஹூதிகளுக்கு நவீன ஆயுதங்கள், நிதி & ராணுவப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த ஆதரவு ஏமனில் ஹூதிகளின் செல்வாக்கைத் தக்கவைக்க உதவுகிறது. இதனால் ஈரானுக்கு ஆதரவாக ஹூதி போரில் இறங்கியுள்ளது. ஆனால், ஹூதியின் தாக்குதலை இடைமறித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
News March 28, 2026
அடுத்தடுத்து விலகினர்.. இபிஎஸ் அதிர்ச்சி

அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அடுத்தடுத்து அவர்களின் கட்சியிலிருந்து விலகுவது EPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். சோளிங்கர் தொகுதியை பாமகவுக்கு கொடுத்ததால் ராணிப்பேட்டை அமமுக மா.செ., பார்த்திபன் அக்கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து, கட்சியின் வளர்ச்சிக்கு தலைமை தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறி காஞ்சி மாவட்ட தமாகா தலைவர் வி.புருஷோத்தமான் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
News March 28, 2026
உங்கள் மீது நான் புகார் அளிக்கவா விஜய்? சீமான்

தவெகவினர் தன் குடும்பத்தையும், நடிகர்கள் SK & அஜித்தையும் இழிவாக பேசுவதாக சீமான் கூறியுள்ளார். இதை எதிர்த்து ’கண்ணியமாக இருங்கள்’ என விஜய் அறிக்கை விட்டிருந்தால், பொன்ராஜுக்கு எதிராக புகாரளிக்க அவருக்கும் தகுதி இருந்திருக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும், ரசிகர்கள் இப்படி பேசும்போது விஜய் எங்கே இருந்தார் எனவும் இதைவைத்து விஜய் மீது தான் புகாரளிக்கட்டுமா என்றும் கேட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


