News May 14, 2024
பி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்

விண்ணப்பித்த 3 நாள்களில் இனி பி.எஃப்., அட்வான்ஸ் பெறும் வகையில், தானியங்கி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2020இல் கொரோனா பாதிப்பின் போது தானியங்கி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பி.எஃப் தொகையை பெற முடியும். இந்நிலையில், தற்போது கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற காரணங்களுக்காக பி.எஃப்., தொகையில் அட்வான்ஸ் பெறுவதும் தானியங்கி முறையாக மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
9 ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்த பாஜக

வரும் 16-ம் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலையொட்டி, 9 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிஹாரில் இருந்து <<19289207>>தேசிய தலைவர் நிதின் நபின்<<>> மற்றும் சிவேஷ் குமார் ஆகியோரை கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. அதேபோல், தேராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் (அசாம்), லட்சுமி வர்மா(சத்தீஸ்கர்), சஞ்சய் பாட்டியா (ஹரியானா), மன்மோகன் சமல், சுஜீத் குமார்(ஒடிசா), ராகுல் சின்ஹா(மேற்கு வங்கம்) ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்.
News March 3, 2026
BREAKING: சிறப்பு நிதி ₹10,000.. அறிவித்தார் ஸ்டாலின்

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது, அவர்களது ஊதியம் ₹12,500-ல் இருந்து ₹15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு நிதியாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு ₹10,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026 – 27-ம் ஆண்டு தொடர் செலவினமாக ₹44.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News March 3, 2026
ஈரானின் உயர் தலைவருக்கான தேர்தலின் போது தாக்குதல்

ஈரானின் புதிய தலைமை உருவாகுவதை தடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த உயர் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை கட்டிடம் முழுவதும் அழிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


