News May 14, 2024
பி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்

விண்ணப்பித்த 3 நாள்களில் இனி பி.எஃப்., அட்வான்ஸ் பெறும் வகையில், தானியங்கி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2020இல் கொரோனா பாதிப்பின் போது தானியங்கி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பி.எஃப் தொகையை பெற முடியும். இந்நிலையில், தற்போது கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற காரணங்களுக்காக பி.எஃப்., தொகையில் அட்வான்ஸ் பெறுவதும் தானியங்கி முறையாக மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
செங்கல்பட்டு: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
தமிழக தேர்தல்.. களமிறங்கும் 3 மத்திய அமைச்சர்கள்

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பொறுப்பாளராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். அதேபோல், தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் NDA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, ஆட்சி அமைக்கும் திட்டத்தோடு 3 மத்திய அமைச்சர்களை பாஜக களமிறக்கியுள்ளது.
News December 15, 2025
துரோகம் செய்யவில்லை: ஜி.கே.மணி

ஜி.கே.மணி துரோகம் செய்ததாக <<18512558>>அன்புமணி <<>>குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த ஜி.கே.மணி, தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். துரோகி எனக் கூறியது வேதனையாக உள்ளதென குறிப்பிட்ட அவர், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க தானே பரிந்துரைந்ததாக கூறியுள்ளார். ராமதாஸ் வேதனையில் உள்ளதாகவும், இருவரும் அமர்ந்து பேசினாலே தீர்வு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


