News May 14, 2024

இபிஎஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது, தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் தெரிவித்தார். இதனை எதிர்த்து தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் இன்று ஆஜரானார். எனினும், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News March 10, 2026

லாக்டவுன் போல மாறும் சூழல்..

image

போரினால் உலகளவில் கச்சா எண்ணெய், கேஸ் & பெட்ரோலிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் ஹோட்டல்கள் மூடப்படுகின்றன, விடுதிகளில் மெனுக்கள் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக நிறுவனங்கள் WFH ஆப்ஷனையும், பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளையும் கொண்டுவரலாம். ஏற்கெனவே பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் WFH நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

News March 10, 2026

கர்ப்பிணிகளே, இதனால் உங்க குழந்தைக்கு ஆபத்து!

image

உண்ணும் உணவு, தண்ணீர் வழியாக தினம் தினம் மனிதனின் உடலில் லட்சக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கிறது. இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்த வரை அனைவரும் (குறிப்பாக கர்ப்பிணிகள்) பிளாஸ்டிக் பொருள்களை தவிருங்கள். இல்லையென்றால் அவை உங்கள் ரத்தத்தில் கலந்து தாய்ப்பால் வழியாக உங்கள் குழந்தையின் உடலுக்குள் செல்லும். அடுத்த தலைமுறையை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 10, 2026

அட்டைப் பெட்டியில் இறந்த குழந்தையை சுமந்த தந்தை!

image

ஜார்க்கண்டில் குழந்தை இறந்து பிறந்த துக்கத்தில் தவித்த தந்தைக்கு, குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காதது மேலும் துயரில் ஆழ்த்தியுள்ளது. கண்ணீரிலும் வேதனையிலும் குழந்தையின் உடலை Card-Board பெட்டியில் வைத்து, ஆட்டோவில் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். பெரும் வளர்ச்சியை நாடு கண்டுள்ளதாக பெருமை பேசும் நிலையில், இன்னும் பலர் அடிப்படை வசதி கூட கிடைக்காமல் தவிப்பது வேதனையே!

error: Content is protected !!