News May 14, 2024
சபரிமலையில் இன்று நடை திறப்பு

வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. நாளை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19ஆம் தேதி சபரிமலை கோயில் பிரதிஷ்டை தினம் என்பதால், நாளை முதல் 19ஆம் தேதி வரை காலையில் நெய் அபிஷேகமும் நடைபெறும். 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
Similar News
News March 15, 2026
ஹெல்மெட் சின்னத்துடன் தயாராகிறதா ராமதாஸ் தரப்பு?

அப்பா – மகன் மோதலில் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்பட்டால், அன்புமணி தரப்பு இரட்டை இலை (அ) தாமரை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வடமாவட்டங்களில் பாஜக காலூன்றும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், ’அய்யா பாமக’ என்ற பெயரில் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட ராமதாஸ் தரப்பு தயாராகவுள்ளதாகவும் தைலாபுர வட்டாரங்கள் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
News March 15, 2026
மதியம் தயிர், மோர் குடிப்பதால் தூக்கமின்மை குறையுமா?

தூக்கமின்றி அவதிப்படுவோருக்கு மலிவான விலையில் ஒரு முடிவு கிடைத்துவிட்டது எனலாம். ஏனென்றால், தயிரில் உள்ள டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் தூக்கமின்மையை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, மதியம் தயிர் (அ) மோர் குடிப்பது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இரவில் தயிர் குடிப்பதால் செரிமானக் கோளாறு உண்டாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE
News March 15, 2026
சென்னை தொகுதியை குறிவைக்கிறாரா வானதி?

கோவை தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன், இம்முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியானது. இதனிடையே, இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி அதிமுகவில் இருந்து வெளியேறிய வடவள்ளி சந்திரசேகரை EPS மீண்டும் கட்சியில் சேர்த்ததாக கூறப்பட்டது. இதனால் கோவை வடக்கு கிடைக்காது என அறிந்த வானதி, சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.


