News May 14, 2024
ஓட்டுக்கு பணம் தராததால் மறியல்

ஆந்திராவில் ஓட்டுக்கு கட்சிகள் பணம் தரவில்லை என்று கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காக்கிநாடா, ராஜமகேந்திரவரம் ஆகிய பகுதிகளில் பணம் கொடுக்கவில்லை என்று கூறி மக்கள் வேட்பாளர்கள் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வேட்பாளர் அலுவலகத்தில் திரண்ட மக்களை போலீசார் விரட்டியடித்தனர்.
Similar News
News September 11, 2025
கல்வியை பறிக்கும் உங்களுடன் ஸ்டாலின்: நயினார்

தேர்தல் ஆதாயத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை திமுக அரசு அலட்சியப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த திருச்சியில் ஆலத்துடையான்பட்டி அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விளம்பர நாடகங்களை அரங்கேற்ற மாணவர்களின் படிப்பை தூக்கியெறிந்து அவர்களின் வாழ்வில் விளையாடுவதா என்று நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 11, ஆவணி 26 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை
News September 11, 2025
விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் BYD..!

சீனாவின் BYD நிறுவனம், இந்தியாவில் EV உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. மேலும், புதிய ரக EV SUV கார்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023-லேயே உற்பத்தி ஆலையை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரிய நிலையில், இந்தியா – சீனா உறவு விரிசலால், அது கிடப்பில் போடப்பட்டது. BYD வருகையால் டெஸ்லா, டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் அடிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.